மேலும்... 5...என்பது குறிப்பிடுவதாவது - படித்து முடித்தவுடன் 5 இலக்கம் கொண்ட சம்பளம் (ரூபாய் 10,000 க்கு மேல்) 4...என்பது குறிப்பிடுவதாவது - 4 சக்கரம் கொண்ட ஒரு கார். 3...என்பது குறிப்பிடுவதாவது - 3 அறை கொண்ட ஒரு உல்லாச வீடு. 2...என்பது குறிப்பிடுவதாவது - 2 குழந்தைகள் (ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண் வாரிசு) 1...என்பது குறிப்பிடுவதாவது - 1 வாழ்க்கை துணை 0...என்பது குறிப்பிடுவதாவது - 0...சூனிய வாழ்க்கை...தான் பிறந்த ஊரைப் பற்றிய வளர்ச்சி எண்ணம் இல்லை. தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேற்றி செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இந்தியாவை வல்லரசாக மாற்றவேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை. உலகம் அமைப்பாதையிலும், ஆரோக்கியப் பாதையிலும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் சில மணி நேரம் கூட இல்லை.. இதுதான் புறவாழ்க்கையில் இந்தியாவில் குறிப்பாக தமிழன் வாழ்ந்து கொண்டு இருக்கும் அர்த்தமற்ற வாழ்க்கை. தேவை இக்கணம்...ஆரோக்கிய சிந்தனை...ஆரோக்கிய வாழ்க்கை. 1..2..3..4..5..6. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், நம்மில் எத்தனை பேர் இதன் படி வாழ்கிறோம். இதன் விலை...நம்மை சுற்றி நாம் காணும் "இமயம் சரிந்தது, இதயம் வெடித்தது" என்ற சுவரொட்டிகள் தான். ஜீவனுள்ள மனிதன் ஜீவனில்லாத சுவரொட்டியாய் மாடுகள் தின்னும் தேவையற்ற காகிதமாய் மாறுவது ஏனோ ? ஒரே காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை.... முறையாக உலக ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் காக்கத் தவறினால் இமையம் மட்டுமல்ல, இமையும் சரியும். தேவை இக்கணம் அர்த்தமுள்ள முறையான வாழ்க்கை. பயனுள்ள குறிப்புகள்: 1: ஒரு கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுதல். 2: ஏதேனும் 2 பழங்களை தினமும் சேர்த்துக் கொள்ளுதல். 3. காய்கறி வகைகள் ஏதேனும் 3 யை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ளுதல். 4. வீட்டு தோட்டத்தில் உள்ள துளசி செடியில் இருந்து 4 துளசி இலைகளை பறித்து நன்றாக உண்ணுதல். 5. ஐந்து புலங்களையும் அடக்கி மனதை உள் நோக்கி திருப்பி 5 நிமிடம் விளக்கேற்றி தியானம் செய்தல். 6. ஆறறிவு படைத்த மனிதன் தன் பகுத்தறிவை 3 வகைகளில் செலவு செய்யலாம். 6 அறிவை 7 ஆம் அறிவாக பயன்படுத்தி தெய்வீக நினைவில் பேராணந்தத்துடன் வாழ்தல். 6 அறிவை அடிப்படையாக கொண்டு யாருக்கும் தீங்கு இழைக்காமல் மனித நிலையில் அமைதியாக வாழ்தல். 6 அறிவில் 5 ஆம் அறிவை பயன்படுத்தி கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இல்லாமல் இன்பம் மற்றும் துன்பம் நிலையில் வாழுவது. உன் வாழ்க்கை உன் கையில்... மிருகமாக வாழ வேண்டுமா ? இல்லை மனிதனாக வாழ வேண்டுமா ? தெய்வீகமாக வாழ வேண்டுமா ? எல்லாம் உன் கையில் உன் சிந்தனையில் கையில். வாழ்க வையகம்....வளர்க பாரதம்....