நாம் இயற்கை வாழ்விலிருந்து விலகி, நோய்களை வரவழைத்துக் கொண்டு, அதற்க்கும் செயற்கையான மருத்துவத்திற்கே ஓடி, தீர்க்க முடியாமல் அல்லல் படுகிறோம்.
ஒரு மண்ணில் பிறந்தவனுக்கு, அந்த மண்ணில் மூலிகைகளே குணம் தரும் என்று சரஹ ஸம்ஷிதை கூறுவது போல் அமெரிக்க, ஐரோப்பிய நாட்டுமருத்துவ முறை இயற்க்கை வழி வாழ்க்கை நமக்கு எப்படி சரியாகும் - இதனை இப்பொழுதுதாவது உணர்ந்து அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ, இந்திய கலாச்சாரத்திற்க்கு திரும்புவோம் !
மேலைநாட்டினரின் உணவு முறை, சீதோஷ்ண நிலை, அந்த இன மக்களின் தன்மை என்று பல வகையிலும் மாறுபட்ட மக்களுக்கான மருத்துவ முறை நம் இந்தியர்களுக்கு எப்படி ஒத்துப்போகும்.
மேலை நாட்டவருக்கு எண்ணெய்க் குளியலே வேண்டாம், நமக்கோ நம் உடலின் சூட்டை தணிக்க எண்ணெய் குளியில் கட்டாயம் தேவை. வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு என்று கிராமப் பழமொழியே இருக்கிறது.
சிந்தியுங்கள், இந்திய பாரம்பரிய வழியில் செயல்படுங்கள். அதிக செலவில்லாத, பின் விளைவுகள் அற்ற, தீங்கு தராத, நமது சித்த வைத்திய முறைகளைப் பின்பற்றுங்கள். உடல் நலம் பெறுங்கள்...மன நலம் பெறுங்கள்..ஆன்மபலம் பெறுங்கள்.
பொதுவாக மூலிகைச்செடி ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துவதுதான் வழக்கம். சில மூலிகைகள் மேலும் இரண்டொரு நோய்களுக்கு மருந்தாக உபயோகமாகலாம். ஆனால் துளசி செடியோ அநேகமாக நோய்கள் அனைத்துக்குமே ஏதாவது ஒரு வகையில் மருந்தாகப் பயன்படுகிறது என்பதுதான் துளசியின் தனிச்சிறப்பு.